June 30, 2011

ஒரு பறவையின் மரண வாக்குமூலம்.

குழந்தைகள் எந்த விஷயத்தை எபப்டி சிந்திக்கும் என்பதற்கு அளவே இல்லை. இதோ ஜுஜ்ஜூவின் கற்பனைத்திறன் :))

அன்றொரு நாள் மாலையில் ஜுஜ்ஜூவும் அவன் அப்பாவும் Yardஇல் விளையாடி விட்டு வரும்போது ஒரு பறவை இறந்து கிடந்ததை பார்த்தவர்கள் அதை நல்லடக்கம் செய்து விட்டு வந்தார்கள். வந்த பின்:

நான்: ஜுஜ்ஜூ பொப்பொ எங்கே?
ஜுஜ்ஜூ: ம்... பொப்பொ (Bhobbo) செத்துபோச்சு.
நான்: எங்கேம்மா?
ஜுஜ்ஜூ: தோட்டத்துல
நான்: பொப்போ உங்ககிட்ட என்ன சொல்லுச்சு?
ஜுஜ்ஜூ: ஜுஜ்ஜூ Bad boy சொல்லுச்சு.
நான்: ச்ச... சாகறப்ப கூட பொப்பொ உண்மைய சொல்லிட்டு செத்திருக்கு...

அதன் பின் கல கல கல கல தான் :). இன்னொரு நாள் என் தம்பியுடன் ஜுஜ்ஜூ பேசிக்கொண்டிருந்தபோது,

ஜுஜ்ஜூ: மாமா...மாமா... ஜுஜ்ஜூ மஸ்ஜித் போயி, அல்லல்லா ஓதி அல்லாகிட்ட து’ஆ கேட்டேன்.
மாமா: அப்படியா செல்லம்... அல்லாகிட்ட என்ன சொன்னீங்க?
ஜுஜ்ஜூ: அல்லா, அம்மீயோட கால் நல்லா பண்ணு சொல்லி து’ஆ செஞ்சேன். (அப்பொழுது கடும் கால்வலியில் அவனிடம் அடிக்கடி து’ஆ செய்ய சொல்லிக்கொண்டிருந்தேன்)
மாமா: அப்படியா... அல்லா ஜுஜ்ஜூகிட்ட என்ன சொன்னாங்க?
ஜுஜ்ஜூ:...ம்...ம்... அல்லா, யூசூஃப் மாமா Bad boy சொன்னாங்க..
மாமா: அது சரி, அல்லாஹ் மட்டும்தான் என்னை இன்னும் Badboy சொல்லாம இருந்தது. இப்ப அவரும் சொல்லிட்டாரா...

:))))))))))))))))