November 15, 2010

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களும், சிந்தனைக்கு ஒன்றும்...!

அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் இனிய சகோதர சகோதரிகளே..,



எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் ஹாஜிகள் எல்லோரும் தத்தம் கடமை முடித்து ஊர் திரும்பும் நேரம் இது. நானும் என் பெற்றோரின் நலமுடன் கூடிய  வருகைக்கு காத்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக பதிவெதுவும் எழுத முடியாத சூழ்நிலை. இன்ஷா அல்லாஹ், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை வல்ல றஹ்மானிடம் நம் அனைவருக்காகவும் து’ஆ செய்யுங்கள். து’ஆ எந்த அளவு வலுவானதாக, உள்ளத்தில் எத்தகைய அச்சத்துடன் வர வேண்டும் என்பதற்காக ஒரு சின்ன வரைபடம் கீழே. அதை விவரிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றவை, இடைவேளைக்கு பிறகு. வ ஸலாம்.




.

November 01, 2010

உதவிக் கரங்களை எதிர்பார்த்து...

புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்! print Email
உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்
திங்கள், 01 நவம்பர் 2010 21:36
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.
வங்கிக் கணக்கு விபரங்கள்:
M. Sulaiman
SBT, Colachel Branch
A/C No : 57059234495
கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.  சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.

இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!
உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாக தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்த குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.

:-சத்தியமார்க்கம்.காம்


October 21, 2010

தாய் எனும் வைரம் --3


அந்த சிறுவனின் வயது இரண்டோ மூன்றோதான். ஆனால் அவனின வருகை, சபையில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏன்? ஏனெனில் அவனுடைய 'அதப்'(Adaab - குணநலன்க‌ள்) அத்தனை அழகானது. எப்பொழுதும் மரியாதையுடன் எல்லோரையும் அழைப்பதும், அழைப்பிற்கு தாழ்ந்து பதில் சொல்வதும், நம்முடைய அகராதியில் சொல்ல வேண்டுமென்றால் ப்ளீஸ், தேன்க்யூ, மே ஐ?...போன்ற மதிப்பை ஏற்படுத்தும் சொற்களை உபயோகிப்பதும், அடக்கத்தை தன் செயல்களில் காட்டுவதாலும் அச்சிறுவனை ஊரே மெச்சியது. இந்த பாராட்டுக்கெல்லாம் உரிய அந்த சிறுவன் யார், இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹி).

அத்தனை சிறு வயதிலேயே அவர் ஊரே மதிக்கும், மரியாதை தரும், புகழும் சிறுவனாய் திகழ்ந்தது எப்படி? அவரின் நன்னடத்தையால். இமாம் அஹ்மதின் (ரஹி) தாய்க்கு தெரிந்திருந்தது, எல்லா 'இல்மு'க்கும்(அறிவு / ஞானம்) முன்னர் ஒரு குழந்தை கற்க வேண்டியது அதபே!! அதாவது நன்னடத்தையே. எனவே அத்தாயானவர்கள் இமாம் அவர்களுக்கு அதிகமாக குர்'ஆன் ஞானத்தையோ, அல்லது ஹதீத் ஞானத்தையோ அளிக்கவில்லை, மாறாக சாப்பிடும்போது, சபைக்குள் வரும்போது, பெரியவர்களை சந்திக்கும்போது என எல்லா இடங்களிலும் நன்முறையில் நடந்து கொள்வது எப்படி என்பதை நன்முறையிலும் அதிகமாகவும் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முறை இமாமவர்கள், அவர்களின் மிகச் சிறு வயதில் ஒரு சபையில் இருக்கும்போது ஒரு அரபி, அவரின் நண்பரிடம் கூறினார், நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக் கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனை (இமாம் அஹ்மது) போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று.

அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல். யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்க‌ளையும் சொல்லித்தருபவர்கள்.

இப்பொழுது புரிந்ததா அந்த அரபியின் வருத்தம். இன்னொன்றையும் உற்று நோக்கினால் புரியும். இமாமவர்கள் ஞானமெல்லாம் கற்று பெரிய இமாம் ஆகும் முன்னர் அவரும் ஒரு 'மு'அத்தபீன்' ஆகவே இருந்தார் என்றால் அது மிகையாகாது. யார்தான் விரும்ப மாட்டார், தன் பிள்ளையின் நற்குணங்களை ஊரே மெச்ச வேண்டும் என?

பற்பல இமாம்களின் சரித்திரத்தை படிக்கும்போது அவர்களின் வாழ்வையும், குணங்களையும், கொள்கைகளையும் கண்டு வியந்து போகிறோம். ஆனால் அதை கற்றுத்தந்த தாய்மார்களைப் பற்றி குறைந்த தகவலே நமக்கு கிட்டுகிறது. இப்படி, அவர்களின் பெயர் சரித்திரத்தில் தத்தம் பிள்ளைகளாலேயே இடம் பெறுகிறது. இங்கும் இமாம் அவர்களின் குணநலஙளில் சீரிய கவனம் செலுத்தியதாலேயே, அவர் ஞானமும் அதிகம் பெற்றார், ஞானமும், நன்னடத்தையும் ஒருங்கே அமைந்ததனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அசைக்க இயலா இடத்தை பெற்றார். எனவே தாய்மார்கள் சிந்திக்க வேண்டியது என்ன, உங்களால் மட்டுமே உங்களின் பிள்ளைகளின் வாழ்வை செப்பனிட முடியும். நேரம் வீணாவதன் முன், இன்றே, இப்பொழுதே, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.


.

October 19, 2010

மெயிலில் வந்த சிந்தனை...

அல்ஹம்துலில்லாஹ், இந்த பதிவு இன்று மெயிலில் கிட்டியது. இதை தமிழ்ப்படுத்தும் அளவிற்கு நேரம் இல்லாத காரணத்தால் அப்படியே இடுகிறேன். இது டீவிக்கு மட்டுமல்ல, இன்டெர்னெட்டிற்கும், எல்லா வசதிகளும் கொண்ட மொபைல் ஃபோன்க‌ளுக்கும் கூட பொருந்தும். எது முக்கியம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.



A teacher from Primary School asks her students to write an essay about what they would like God to do for them...

At the end of the day while marking the essays, she read one that made her very emotional.
Her husband, that had just walked in saw her crying and asked her:
- What happened?

She answered - Read this. Its one of my students essays.

Oh God, tonight I ask you something very special:
Make me into a television.
I want to take its place. Live like the TV in my house. Have my own special place, and have my family around ME.

To be taken seriously when I talk....
I want to be the Center of attention and be heard without interruptions or questions.

I want to receive the same special care that the TV receives when it is not working.
Have the company of my dad when he arrives home from work, even when he is tired.

And I want my mom to want me when she is sad and upset, instead of ignoring me... and... I want my brothers to fight to be with me... I want to feel that family just leaves everything aside, every now and then, just to spend some time with me.

And last but not least make it that I can make them all happy and entertain them...

God I dont ask you for much... I just want to live like every TV.

At that moment the husband said:  - My God, poor kid. What horrible parents!

She looked up at him and said:  That essay is written by our son!!!

October 15, 2010

ஹஜ் எனும் புனிதப் பயணம்


காட்சி ஒன்று:

* அது ஒரு வனாந்தரம்....புல்லுமில்லை, நீருமில்லை, மக்களுமில்லை, மனிதமும் இல்லை...வெயில் கொளுத்தும் பாலையில் நிழலுக்கும் தாகமெடுக்கும் கோடை. திருமணம் முடித்து குழந்தையும் பிறந்த பின், பச்சை மண்ணையும் அதன் தாயையும் பாலைவன மண்ணில் விட்டுவிட்டு திரும்பியும் பாராமல் நடக்கிறார் கணவன்*...

காட்சி இரண்டு:

* பசித்தது பிள்ளைக்கு, பொட்டலத்தில் இருந்ததும் தீர்ந்து போய் நா வறண்டு அழுத தாய்க்கு உதவி செய்யவோ அல்லது என்னவென்று விசாரிக்கவோ எவரும் இலர். தவமிருந்து பெற்ற தங்கப் பாலகனை தனியே கொதி மணலில் விட்டு விட்டு மலைகளின் நடுவில் ஓட ஆரம்பித்தாள் தாய்**...


காட்சி மூன்று:

* கட்டளை கிடைத்தது கனவில், கொல்லும்படி தன் உயிரினும் மேலான மகனை. பிறந்த சில வருடங்களிலேயே இறைவனுக்காக தாயையும் தந்தையையும் வளர்த்த ஊரையும் பிரிந்த தனயனுக்கு தன் மகனை கொல்லும்படி கனவு வந்ததும் அஞ்சவில்லை, அசரவில்லை, உயிரினும் மேலாய் நேசித்த தன் மகனை தானே பலியிடவும் தயக்கமின்றி புறப்பட்டார் அத் தந்தை*...

காட்சி நான்கு:

* அழைத்தவர் தந்தையானாலும் எதற்கு என்று எதிர்க் கேள்வியில்லை. உன்னை பலியிடவே அழைத்துப் போகிறார், சொன்னது சாத்தான். கேட்டவுடன் புத்தி மாறவில்லை, தந்தையுடன் விவாதம் செய்யவில்லை, மாறாக சாத்தானை கல்லால் அடித்தார் மகன், தந்தையின் பாசத்தை அறிந்தவராதலால் கூறினார் தந்தையிடம் என்னை குப்புற படுக்க வைத்து பலியிடுங்கள் அப்பா... என் முகத்தை பார்த்தீரானால் ஒருக்கால் உங்கள் நெஞ்சம் இளகி இறைவனுக்கு மாறு செய்ய துணிந்து விட்டால்...தன்னையே பலியிட யோசனை கூறியவர் அந்த குடும்பத்தின் அடுத்த தியாகி, மகன்***...

காட்சி ஐந்து:

* யாரை அழைப்பது, யார் வந்து தொழுவர் இந்த ஆலயத்தில், எங்கிருந்து வருவர், எதன் மீதேறி வருவர், என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காது என் கடன் பணி செய்வதே என ஆலயத்தை எழுப்பினர் தந்தையும் தனயனும், அதன் மீதேறி அழைப்பும் விடுத்தனர், நெஞ்சின் துடிப்பை அறிந்த இறைவன் கூறினான், இந்த அழைப்பினை உலகின் கடைசி மனிதன் வரை நான் கொண்டு செல்வேன்....அவர்கள் யாவரும் வருவர் இங்கே தொழ...இறைவனின் வாக்கு பொய்ப்பதில்லை...


தியாகங்களுக்கு பேர் போன அக்குடும்பத்தினரை அந்தரத்தில் விட்டானா இறைவன்? இல்லையில்லை, அனைவரின் வாழ்விலும் அவர்களைப் போல வாழ்வதும், அவர்களின் வேர்வையில் எழுப்பப்பட்ட இறையில்லத்தை தொழுவதும் எம்மவர் வாழ்வில் கடமையாக்கினான். இதோ அந்த தந்தை, தாய், தனயனின் வாழ்வை, சில காலமேனும் வாழ்ந்து பார்க்கவும், அந்த இறையில்லத்தில் தொழுதிடவும் வேளை வந்துவிட்டது நம்மில் பலருக்கு. என் அம்மியும், அப்பாவும் இவ்வருடம் இந்த புனித பயணத்திற்கு தயாராகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

இன்னும் இரண்டு நாட்களில் பயணம், என் உயிர் அங்கிருக்க உடல் மட்டும் கொண்டிங்கு வேதனையுடன் இருக்கின்றேன்....அந்த புனித பயணத்திற்கு வழியனுப்பி வைக்க முடியாத சூழ்னிலை....அந்த பரவசத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை...கண்ணீரும், உற்சாகமும் பீரிடும் அந்த வேளையை கூடவே இருந்து சுவைக்க முடியாத் ஓர் நிலை....எனினும் அம்மி, அப்பா...இருவரிடத்திலும் மீண்டு கூறுகிறேன்...எனது பாக்கியம் நான் தங்களுக்கு பெண்ணாய் பிறந்தது, எனது சுவர்க்கம் தங்களுடன் என் பால்யத்தையும், விவாகம் வரைக்கும் உண்டான காலத்தை கடந்தது, என் வெற்றிகள் அனைத்திற்கும் வேராய் இருந்த தங்களின் ஹஜ் சுகமானதாய் அமையவும், அல்லாஹ்வினிடத்தில் கபூல் செய்யப்படவும், உடலும் மனமும் சுகமாய் நீங்கள் இருவரும் ஊர் திரும்பிடவும், எல்லாம் வல்ல அர் ரஹ்மான் அருள் புரிவானாக. ஆமீன். சகோதரிகளே, சகோதரர்களே...என் தாய் தந்தைக்காகவும், இன்னும் இந்த வருடம் ஹஜ் செய்யும் யாவருக்காகவும் து'ஆ செய்வீர்களாக.
யாவரின் ஹஜ்ஜையும் கபூல் செய்து, எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, யா அல்லாஹ் அனைவரையும் திருப்தியுடனும், உடல் மற்றும் மன நலத்துடன் ஹஜ்ஜை முடித்தும் தருவாயாக. ஆமீன். ஆமீன். யாரப்புல் ஆலமீன்.



*கணவன் ‍ நபி இப்றாஹீம் (அலைஹ்)
**தாய் ஹாஜர் அம்மையார்(அலைஹ்)
***மகன் நபி இஸ்மாயீல்(அலைஹ்)

September 28, 2010

தாய் எனும் வைரம் --2

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

சென்ற பதிவில் இமாம் மாலிக்(ரஹி) அவர்களின் தாயைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்பவருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்'ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன? ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.

அந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்க‌ள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.

அந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும்? து'ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல...யாரிடமும் கேட்டல்ல...கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து'ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து'ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அந்த தாயின் து'ஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகள்:
  • அல்லாஹ் மீதான அசையாத நம்பிக்கை, அவனின் உதவி மேலான நம்பிக்கை.
  • து'ஆ ஏற்றுக்கொள்ளபட வேண்டிய சூழலை உண்டாக்கியது (ஆம்! து'ஆ ஒவ்வொன்றும் கபூல் ஆவதற்கு தேவையான காரணிகள் பல உண்டு )
  • தம் பிள்ளைகள் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து அதன் பாதையிலேயே மரணிக்க வேண்டும் என மனதில் உறுதியுடன் வாழ்ந்தது.
  • இன்னும் பல கூறலாம்.

நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்வி:

  • நாம் எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்காக து'ஆ செய்கின்றோம்?
  • அவர்களின் உடல் நலனுக்காகவும், பாட சம்பந்தமாகவும் கட்டாயம் செய்வோம். அவர்களின் ஆகிரத்திற்காக?
  • அல்லாஹ்விடம் அவர்களுக்காக தவ்பா செய்து?
  • அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள?
  • நாளை கப்ரில் நாம் சென்ற பிறகு நமக்காக து'ஆ செய்யும் ஹிக்மத்திற்காக?

யோசியுங்கள். முடிவு உங்கள் கையில். எப்பொழுதும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்...திண்ணமாக அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் உள்ளது!!

இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மின்னும் வைரங்களோடு சந்திப்போம். அதுவரை தேவை து'ஆ.

September 24, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 4)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அன்பின் சகோதர சகோதரிகளே,

நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு தொடர்கின்றேன். மன்னிக்கவும். இந்த தொடரின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை படித்து விட்டீர்களா?



இந்த பாகத்தில் கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு தரப்படும், தர வேண்டிய, இன்னும் நம்மை அறியாமலே தந்து கொண்டிருக்கின்ற கல்வியைப் பற்றி காணலாம். இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், கரு தங்கிய பின் அதற்கென அதிகமதிகம் அல்லாஹ்விற்கு நன்றி கூர்வதும், அதிகமதிகம் திக்ரு ஓதுவதும் தாய்க்கும், பிள்ளைக்கும் நன்மை.

கர்ப்ப காலம் ஆரம்பித்ததை அறிந்த பின் செய்ய வேண்டியதில் முதலாவது எவ்வளவு இயலுமோ அவ்வளவு குர்‍ஆனிலும், இன்னும் பிற இஸ்லாமிய புத்தகங்களிலும், ஒளி / ஒலி வடிவங்களிலும் அவற்றை அதிகமதிகம் செவி மடுப்பதும் நாவில் சதா சர்வ காலமும் புழங்க வைப்பதுமே ஆகும். இதன் பாதிப்பு எவ்வளவு தூரம் என்பதற்கு எந்த அசாதாரண ஆன்மாக்களையும் தேட வேண்டாம். நம் வீட்டிலோ அல்லது நம்மை சுற்றியிருப்பரிடத்திலோ தென்படும் குழந்தைகளே போதும். உதாரணத்திற்கு சில குழந்தைகள் ஒரு நடிகருக்கோ அல்லது ஒரு சீரியல் நாடகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட திரைப்பட பாட்டுக்கோ தனிச்சையாய் சில ரெஸ்பான்ஸ் காட்டு, அதற்கு பிடித்திருக்கின்றது என்பதை குறிப்பிடும். என்னுடைய ஒன்று விட்ட சித்தப்பா மகன் இருவரை நான் பார்த்திருக்கின்றேன். எந்த விளையாட்டு எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் சன் டிவியில் செய்திகள் போடும் நேரம் சரியாக டீவி முன் ஆஜராகி விடுவர். அதில் அந்த செய்தி வாசிப்பவர் பெண்ணோ ஆணோ வந்து வணக்கம் கூறிய பின்னே கலைந்து செல்வர். ஏன் என நான் யோசித்துள்ளேன். பிறகு கூர்ந்து கவனித்ததில் இரு விஷயம் தெரிந்தது. எங்கள் சித்தப்பா மாலை வீட்டிற்கு வந்த பின் செய்திகளுக்கு மட்டும் ஒலி சற்று அதிகம் வைப்பதும், வீட்டில் மற்றனைவரும் சப்தங்களை குறைத்துக் கொள்வதும், இன்னும் எங்கள் சித்தி, பெண்களுக்கேயான நடைமுறையாக வாசிப்பவர் ஆணா பெண்ணா என காணவும், அவரின் சேலை அல்லது நகை போன்ற விஷயங்களை கவனிக்க சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்வதும் இயல்பாக எப்பொழுதும் நடக்கிறது. இதுவேதான் அவர் கருவுற்றிருக்கும் போதும் நடந்திருக்கும். கருவில் உள்ள சிசுவிற்கு தாயின் ஆர்வம் தனக்கும் ஒட்டியிருக்கும். மற்ற வேளைகளைப் போலல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வீட்டில் காட்டப்படும் முக்கியத்துவம் மனதில் நின்றிருக்கும். இது போல பல விஷயங்களை நீங்கள் பிள்ளைகளையும் அவர்களின் தாய் தந்தையரையும் கூர்ந்து கவனித்தால் புரியும். இதிலிருந்து இந்த பகுதியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? கர்ப்ப காலத்தில் காட்ட வேண்டிய கவனம், நீங்க‌ள் எதையெல்லாம் அனுபவிக்கின்றீர்களோ, அதையெல்லாம் அந்த சிசுவும் அனுபவிக்கின்றது.

சரி, இனி எப்படி குழந்தையின் இந்த ஆர்வத்தை மேம்படுத்துவது? எந்த மாதிரி குழந்தையை நீங்கள் வளர்க்க விரும்புகின்றீர்களோ அதன் அடித்தளத்தை இட தங்களிடம் பத்து மாதம் உள்ளது. அதன் பின்னும் நேரம் உள்ளாது. ஆனால் இந்த பத்து மாதமானது, மிக மிக டெலிகேட்டானது. அப்பொழுதுதான் மெழுகப்பட்ட சிமெண்ட் தரையைப் போல. அதில் ஏதும் ஒடுக்கு விழுந்து விட்டாலோ, பள்ளமாகி விட்டாலோ மேற்பூச்சு செய்து மேல்வாரியாக சரி செய்யலாமே ஒழிய அதை முழுவதும் செப்பனிடுவது கஷ்டமே.

செயல் முறையில் இதை செவ்வனே செய்ய என்ன செய்யலாம்? வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருப்பவரா? அதிகம் குர்‍ஆன் ஓதுங்கள். சீடீயிலோ அல்லது டேப்பிலோ குர்'ஆனை ஒடவிட்டு கேளுங்கள், நஙு ஓதத் தெரிந்தவரா, பத்து மாதம் முழுதும் ஏதாவது சூறாவை மனனம் செய்யுங்கள். புதிய புதிய து'ஆக்களையும், திக்ருக்களையும் மனனம் செய்யுங்கள். இதுவரை குர்'ஆன ஓத தெரியாமலே காலம் கழித்து விட்டீர்களா இந்த பத்து மாதத்தில் ஒரு தடவையாவது தெளிவாய் ஓதுமளவிற்கு கற்றுக் கொள்ளுங்கள். இஸ்லாமிய கோட்பாடுகளைப் பற்றியும், இஸ்லாமிய கதைகளையும் உங்கள் குழந்தைக்கு நேரில் சொல்வது போல கதை சொல்லுங்கள். வேலைக்கு செல்பவர் ஆயினும் சிறிது நேரம் தனியே இதற்காக எடுத்துக் கொண்டு நல்முறையில் செலவிடுங்கள். இவையெல்லாம் போதனையல்ல. என் மகனை சுமந்த காலத்தில் நான் செய்து கண்ணாற அதன் பலனை காணும் பாக்கியம். நான் மட்டுமல்ல, இன்னும் பல தாய்மார்கள் இதனை கண்ணுற்று இருக்கின்றார்கள். இப்பொழுதும் என் மகன் (இரண்டரை வயதாகின்றது) மேலுக்கு சுகமில்லாமல் ஆகிவிட்டாலோ, ஏதாவது ஒரு காரணத்தினால் உடம்பும் மனமும் அமைதிலாமல் இருந்தாலோ, என்ன செய்தாலும், என்ன மருந்து போட்டாலும் கேட்க மாட்டான். வலியிலும், இயலா நிலையிலும் அரற்றிக் கொண்டே இருப்பான். குர்'ஆன் ஓதினாலோ அல்லது சீடீ ப்ளேயரில் ஓட விட்டாலோ மட்டுமே சற்று அமைதியுறுவான். அதுவும் அது நிற்காமல் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். என் கண்களில் அவனின் ஆர்வத்தையும் அல்லாஹ் அவனுக்கு தந்துள்ள மனதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் ஒரு புறமும், அவனின் உடல் வருந்துவதைக் கண்டு மனவேதனையில் கண்ணீருமாக நிரம்பி இருக்கும். இந்த இரண்டரை வயதில் அவன் கற்றுக் கொண்டதும் கற்றுக் கொள்வதும், அவனின் ஆர்வமும் என்னுடைய இந்த வயதுடன் ஒப்பிடும்போது நான் சிறு எறும்பின் அளவும் இல்லை. எப்படி சாத்தியமானது? கர்ப்ப காலத்தில் செய்த து'ஆக்களும், அதன் மேலான அமலும், எல்லாவற்றிற்கும் மேலாய் அல்லாஹ் சுப்ஹானவத ஆலாவின் அருளுமே காரணம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


இந்த காலத்தில் தாய்க்கு மட்டுமே பங்கா, நாங்களெல்லாம் நற்கூலி சம்பாதிக்க வேண்டாமா என்று சகோதரர்களே எம்மை முறைக்காதீர்கள். உங்களுக்கும் சம பங்குண்டு இதில். எப்படி??

மாலை வியாபரமோ, வேலையோ முடித்து விட்டு வந்த பின்னோ..அல்லது இரவு தூங்கப் போகும் முன்னோ மேலுள்ள எல்லா வழிகளையும் நீங்கள் பின்பற்றலாம். தாயின் வயிற்றினருகில் அமர்ந்து அழகிய கிரா'அத்துடன் ஓதிக் காட்டலாம். அல்லது ஹதீத்துக்களிலிருந்தும் குர்'ஆனிலிருந்தும் நல்ல கதைகளைக் கூறலாம். இது ஏதும் செய்ய இயலாதவர்களாக எட்ட முடியா தூரத்தில் இருக்கின்றீர்களா, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இதை செய்யுங்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதன் பலனை தங்களுக்கு நிச்சயம் கண்ணாற, மனதார பார்க்கச் செய்வான். நினைவு செய்யும்போதெல்லாம் அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள், மறக்காமல்.

பத்து மாதத்தில் மிகவும் முக்கியமாக இஸ்லாத்தில் அல்லாத எந்த பித்‍அத்தையும் கிட்டே நெருங்காதீர்கள். நம்மில் பல பேருக்கு உள்ள சங்கடம் என்னவெனில், பித் அத் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அப்படியே தெரிந்து கொண்டாலும் தாய் தந்தைக்கோ அல்லது கணவனுக்கோ அல்லது அவரின் தாய் தந்தைக்கோ மறுத்து எப்படி இருப்பது?

இது இந்த கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும் கர்ப்ப காலத்தில் சண்டை சச்சரவுகள், அவை அளவில் சிறியனவோ, பெரியனவோ...தாய் மற்றும் சேய்க்கு ஆபத்தான விஷயங்கள். எனவே இதிலிருந்து மீள் ஓர் வழி சொல்கிறேன். (நினைவில் வையுங்கள். நான் ஆலிமோ, முஃப்தியோ அல்ல. ந'ஊதுபில்லாஹ்) எந்த செயலையும் செய்யும் முன் நபிவழியில் இதற்கு ஆதரமிருக்கிறதா என்று ஆராய்வது அவசியம். அதன்பின், அந்த செயல் கல்சுரலாக செய்யப்படுகின்றதா அல்லது அதிலும் சேர்த்தியில்லையா என்பதை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, கர்ப்ப காலத்தில் எல்லாருடைய உடம்பும் ஒன்று போல இருக்காது. சில பேருக்கு உடையும், ஆபரணங்களுமே பாரமாய் தெரியும். அப்பொழுது கை நிறைய வளையல்கள் போட சொன்னாலோ, அல்லது தினமும் பூக்களால் அலங்கரித்துக் கொள்ள சொன்னாலோ....இது இஸ்லாத்தில் உள்ளதா என வாதம் செய்ய கிளம்பாதீர்கள். இது கர்ப்பஸ்த்ரீக்கு சந்தோஷத்தை அளிக்க நடைமுறையில் வந்துள்ள ஓர் செயல். தங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், யார் மனமும் நோகாதபடி நாசூக்காக தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரம் தங்களுக்கு பின் விளைவுகள் ஏதும் ஏற்படாது என்னும் பட்சத்தில் மற்றவருடைய சந்தோஷத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏர்வாடி தர்காக்கும், நாகூருக்கும் போய் வர வேண்டுமென கட்டளைகளா. போய் வாருங்கள். அங்கிருப்பவர்களுக்கு சலாம் சொல்லுங்கள். மனதில் அல்லாஹ்விடம் மட்டும் அதிகமதிகம் தவ்பா செய்து அங்கே வழி தவறி ஷிர்க்கில் உள்ள எல்லோரையும் நல்வழிப்படுத்த து'ஆ கேளுங்கள். முடிந்தவரை சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் பொறுமையுடன் வாழ்வதை இப்பொழுதே உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாமிய கருத்தரங்களும், குர்'ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்புக்களும் ஆங்காங்கே நடந்து கொண்டேயுள்ளன. முடிந்தவரை அவற்றிலெல்லாம் கலந்து கொள்ளுங்கள். உங்களால் அமரவே முடியாது என்ற நிலை வந்தால் ஓரத்தில் படுத்துக் கொள்ளுங்கள். அல்லது சேரை விட்டுவிட்டு கீழே கால்கள் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். ஏன் என்று கேட்டீர்களானால், அல்லாஹ்விற்காக அவனின் வேதத்தையும் அவனின் மார்க்கத்தையும் படிக்க சேரும் கூட்டத்தினர்க்கு மலக்குமார்களின் ஸ்பெசல் து'ஆ கட்டாயம் உண்டு. நீங்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து ஆலிம் ஆகவிட்டாலும், அந்த கூட்டத்தில் இருந்த காரணத்திற்காக மலக்குமாரின் து'ஆவில் நீர் இணைவீர், தங்களின் செல்வங்களும். இன்னும் அதிகமான சாந்தியும் சமாதானமும் நற்பண்புகளும் உங்கள் குழந்தைகளிடம் நிலைக்கும்.


முடிவில் இன்னொரு விஷயத்தையும் நினைவில் வையுங்கள். நீங்கள் ஒரு பொருளையோ, வேலையையோ மன விரும்பி ஒன்றி செய்யாதவரை, தங்கள் குழந்தை அதை கற்றுக் கொள்ளும், கற்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். சட்டியிலில்லாமல் அகப்பையில் வராது!!

கர்ப்ப கால முடிவில்...தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்!!



.

September 08, 2010

ஈத் முபாரக் !!

August 24, 2010

ரமதான் மாதத்துக்கென புதிய தளம்

அஸ்ஸலாமு அலைக்கும் மக்களே...

ரமலான் மாதத்தில் படிப்பதையும், பயன்பட்டதையும் ஒருங்கே சேர்த்து வைக்க ஒரு வலைப்பூவை தொடங்கியுள்ளேன்...இன்ஷா அல்லாஹ் அதனை தாங்களும் படித்து, மற்ற சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்து நற்கூலியை சம்பாதித்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.


  • து'ஆவில் கட்டாயம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மறக்காமல் நினைவுகூருங்கள்.  
  • எங்கள் பள்ளி வாசல் கட்டிட வேலைக்கும் நன்கொடை தாருங்கள். ஏனைய சகோதர சகோதரிகளையும் இன்ஷா அல்லாஹ் இறைவனுக்கு அழகிய கடனை தர நினைவூட்டுங்கள்.

வஸ்ஸலாம்

August 05, 2010

பள்ளிவாசல் வளர உதவிடுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,


எங்கள் வீட்டினருகில் உள்ள இந்த பள்ளிவாசல் வளர உதவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பல வளங்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் தந்தருள்வானாக. ஆமீன். ரமதான் மாதம் வாசலின் வெளியே விரைந்து வந்து கொண்டிருப்பதால், மேன்மைமிகு மாதம் முடிந்த பின் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

பள்ளியின் வலைப்பூ: மஸ்ஜித் மாமூர்

July 19, 2010

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...!!



மாஷா அல்லாஹ். அல்லாஹு சுபஹானஹுவத ஆலா இந்த சகோதரிக்கும் இன்னும் இது போல தெளிவாக சிந்தித்து மார்க்கத்தை அழகாக பின்பற்றும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும் இரு உலகின் நன்மைகளையும் வாரி வழங்கி, அவர்களின் தவறுகளை மன்னித்தருள்வானாக. ஆமீன்.

June 06, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 3)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

இதுவரை வந்த இரண்டு பாகங்களில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் என்ன என்ன விதங்களில் நம்மை மெருகூட்டிக் கொள்ளலாம் என்பதனைப் பார்த்தோம். எனவே, நல்ல குழந்தைகளை பெற்றெடுப்பதும் வளர்ப்பதும், குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறது, இஸ்லாம்.

ஒருமுறை அபுல் அஸ்வத் அத் து'ஆலீ என்பவர் தன் குழந்தைகளை நோக்கிக் கூறினார், "நான் உங்களுக்கு நல்ல தந்தையாக இருந்தேன், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது பின் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின், இன்னும் நீங்கள் பிறப்பதற்கு முன்ன‌ரும்" அப்பொழுது அவரின் குழந்தைகள் கேட்டனர்,"அதெப்படி நாங்கள் பிறக்கும் முன்னரே நீங்கள் எங்களுக்கு நல்லது செய்ய முடியும்?" அதற்கு அபுல் அஸ்வத் கூறினார்,"உங்களுக்காக ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை, நீங்கள் பிறந்த பின் உங்களை நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ளும் பெண்ணை நான் மனைவி ஆக்கிக் கொண்டதன் மூலம்"

இன்னும் ஓர் அறிஞர், அர் ரியாஷீ தன் குழந்தைகளிடத்தில் கூறியதாவது,"நான் உங்களுக்கு செய்த எல்லா நல்ல காரியங்களிலும் முதன்மையானது, உங்களுக்காக ஒரு நல்ல வம்சத்தில் வந்த, நற்குணம் கொண்ட மேன்மையான பெண்ணை திருமணம் செய்ததாகும்"

எனவே இவ்வாறான முன்மாதிரிகள் மூலம் மீண்டும் மீண்டும் புலப்படுவது என்ன, திருமண விஷயத்தில் காட்ட வேண்டிய அக்கறை, தேர்ந்தெடுக்க வேண்டிய வழிமுறை இவையெல்லாம்.

இனி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே அல்லாஹ்வினிடத்தில் அதற்காக எவ்வாறு து'ஆ செய்யலாம் என்பதையும், எவ்வளவு சிரத்தையாய் இந்த நேரங்களில் இருக்க வேண்டுமென்பதையும் காணலாம், இன்ஷா அல்லாஹ்.

திருமணம் முடிந்த பின் குழந்தை பிறப்பை இப்பொழுதெல்லாம் தள்ளிப் போடுவது ஃபேஷனாகி விட்டது. எனக்கு தெரிந்த ஓர் குடும்பத்தில் கல்யாணம் செய்தவுடன் அமெரிக்கா வந்துவிட்டதால் இரண்டு மூன்று வருடங்கள் நன்கு சுற்றிப் பார்ப்பதிலும் பொறுப்புகளில்லாமல் சுதந்திர‌மாய் இருப்பதுவுமென நினைத்து மூன்று வருடங்கள் தள்ளிப் போட்டன‌ர். இப்பொழுது அல்லாஹ் இன்னும் அவர்களுக்கு நாடவில்லை. மறைமுக ஏச்சு பேச்சுக்களை தாங்கிக் கொண்டுள்ளனர். நம் தாய் தந்தையர் வளர்ந்த விதம் வேறு, நாம் வள்ர்ந்த விதம் வேறு. வேறு நாடுகளில் வந்து தங்கும்பொழுது, அவர்களுடைய உணவுப் பொருட்களை நம் கலாசரத்தில் கொண்டு வ‌ரும்பொழுது, வேகத்திற்கு ஈடு கொடுக்கும் பேரில் சத்தான உணவுகளை விட்டு விட்டு உறைந்து செத்துப் போன காய்கறிகள், மாமிசம ஆகியவற்றை புழங்குவது போன்ற சில பல விஷயங்களால் நம் உடல் அதன் ஹார்மோன்க‌ளில் பற்பல வித்தியாசங்களை கொண்டு வருகிறது. இதனால் மேற்கண்ட நிலையை அடைய வேண்டியிருக்கிறது. இவர்களிப் போலவே இன்னும் பல குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர் விட்டலும், அவர்களுக்கு புரியாததை எண்ணி வியந்தே போகிறேன். தேவை என்னவென்றாலும் அல்லாஹ்வினிடத்தில் நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும், நம் வாழ்க்கையை ஹலாலாக வைத்து, இஸ்லாம் கூறும் வகையில் வாழ்வதுமே வெற்றியை தரும். வருடங்கள் பல ஆனாலும் நம்பிக்கை வேண்டும். அய்யூப் நபிக்கு இறைவன் 90 வயதில் குழந்தைப்பேறை தரவில்லையா? இப்றாஹீம் நபிக்கு, அவர் மனைவி தன்னை மலடி என்று கூறிய பின்னும் அல்லாஹ் பல நல்மக்களை தரவில்லையா? இன்னும் இதைப் பற்றி பேசிக் கொண்டே போனால் நம் கட்டுரையின் கருவிலிருந்து விலகிவிடும் அபாயம் அதிகமாக தெரிகின்றது, எனவே இன்ஷா அல்லாஹ் நாம் இதைப் பற்றி காலம் வரும் போது கவனிப்போம், இன்ஷா அல்லாஹ்.


து'ஆ ஒரு இறை நம்பிக்கையாளனின் ஆயுதம் என்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

"து'ஆ என்பது ஆயுதம் போன்றது. மேலும் ஆயுதத்தின் கூர்மையை விட அதனை உபயோகிப்பவரின் திறமையே அந்த ஆயுதத்தின் மூலம் பயனை அளிக்கும். அந்த ஆயுதமும் கூர்மையாய் இருந்து குறைகள் ஏதும் இல்லாமலிருக்கும் பட்சத்தில், அதை உபயோகிப்பவரின் புஜங்களும் வலிமையானதாக இருக்கும் பட்சத்தில், இனி அவனை தடுத்து நிறுத்த வேறு எதுவும் கிடையாது எனும் பொழுது, அவன் பார்வையிலிருந்து பகைவன் தப்ப முடியாது. ஆனால் இந்த மூன்று விடயங்களில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும், ஆயுதம் அதன் பலனை தராது."

எனவே நம்பிக்கையுடனும், அந்த நம்பிக்கையின் மேல் நல் அமலுடனும் அல்லாஹ்வினிடத்தில் நாம் து'ஆ கேட்கும் பொழுது இன்ஷா அல்லாஹ் அது கண்டிப்பாக வெற்றி தரும். இறைவனே எல்லாவற்றையும் அறிந்தவன்.

து'ஆவைப் பற்றி இப்பொழுது எதற்கு என்று கேட்கிறீர்களா? உறவு கொள்ளும் பொழுது கூற வேண்டிய து'ஆவையும் அலட்சியமாய் விடும் சூழ்நிலையை யோசித்துதான். உறவு கொள்ளும் முன் ஒழுவுடன் இருப்பதும், அதற்கு முன் இரு ரக்‍அத்துக்கள் தொழுது அல்லாஹ்வினிடத்தில் ஷைத்தானிடத்திலிருந்து பாதுகாப்பு கேட்பதும், அந்நேரத்தில் இஸ்லாமிய வழிமுறைகள் என்னவோ அதை கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமானது.

உறவு கொள்ளும் பொழுது கூற வேண்டிய து'ஆ

தமிழில் : "பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபஷ் ஷைத்தான மாரஜக்தனா"
மொழிபெயர்ப்பு: "அல்லாஹ்வின் பெயரால். யா அல்லாஹ், ஷைத்தானிடத்திலிருந்து எங்களுக்கும், எங்களுக்கு எதை (ரிஜக் / குழந்தை) கொடுக்க நாடியிருக்கின்றாயோ அதற்கும் பாதுகாப்பு அளிப்பாயாக".
புகாரி 6/141, முஸ்லிம் 2/1028

இதன் பின், குழந்தைப்பேறு உறுதிபடுத்தப்படும் வரை அதிகமதிகம் கூற வேண்டிய து'ஆ:
தமிழில்: "ரப்பி ஹப்லி மின்லதுன்க்க துர்ரியத்தன் தய்யிபத்தன் இன்னக்க ஸமீயுத் து'ஆ"
மொழிபெயர்ப்பு:"யா அல்லாஹ், எனக்கு நல்லதொரு வாரிசை தந்தருள்வாயாக. இன்னமும் நீயே எல்லாவற்றையும் கேட்பவனாக இருக்கிறாய்" (குர்'ஆன்‍-ஆலே இம்ரான் 38)
அதன் பின் வரும் காலங்களில் அதிகமதிகம் கூற வேண்டிய து'ஆ:

தமிழில்: "ரப்பி ஜல்னி முகீமஸ்ஸலாத்தி வ மின் ஜுர்ரியத்தி ரப்பனா வத கப்பல் து'ஆயீ"
மொழிபெயர்ப்பு:"யா அல்லாஹ், என்னை தொழுகையை  நிலைநிறுத்துபவனாக ஆக்குவாயாக. இன்னும் என் மக்களையும் அவ்வாறே ஆக்குவாயாக. யா அல்லாஹ் என் து'ஆவை ஏற்றுக் கொள்வாயாக."
(குர்'ஆன்-இப்றாஹீம்:40)

இனி, மிக முக்கியமான ஒன்பது மாதங்கள். இன்ஷா அல்லாஹ், அம்மாதங்களில் எவ்வாறெல்லாம், குழந்தைக்கு இஸ்லாத்தையும் அதன் வழிமுறைகளையும், குர்'ஆன், ஹதீஸ் மேல் ஆர்வத்தையும் வளர்க்கலாம் என்பதை காண்போம்.

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ



June 04, 2010

நஸீஹா Man

நஸீஹா Man.
இது நான் மிக விரும்பி பார்க்க ஆரம்பித்த காமிக்ஸில் ஒன்று. ஆனால், வல்ல இறைவன் அதை ஆக்கபூர்வமாக கொண்டு வந்தவரின் வாழ்க்கையில் வேறு முடிவு நாடியிருந்தான். காமிக்ஸை பார்த்து மகிழுங்கள்.


காமிக்ஸின் கதை, அதை ஆரம்பித்தவரின் கதை பற்றி அறிய, இங்கே சொடுக்குங்கள். நன்றி.


தாய் எனும் வைரம் --1

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

வைரம் மட்டுமே மற்றொரு வைரத்தை அறுக்கவோ, அதை செதுக்கவோ அதன் மூலம் மின்ன வைக்கவோ முடியும். இந்த தொடரில் நாம் நம் சமுதாயத்தில் மின்னிய இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்ற வைரங்களையும் அவர்களை வைரங்களாக்குவதில் தன் வாழ்வையே அர்ப்பணித்த தாய் எனும் வைரங்களையும் பார்க்க போகின்றோம், இன்ஷா அல்லாஹ்.

மீண்டும் கூறுகின்றேன், இது தாய்க்கு மட்டுமல்ல. தந்தைமார்களும் தங்களால் முடிந்த அளவு குழந்தைகளை நல்வழியில் வளர்க்க பொறுப்பேற்க வேண்டும். சரி, இனி முதல் வைரத்தை பார்க்கலாம். எந்த வித அளவுகோல்களைக் கொண்டும் நான் இவர்களை ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தவில்லை. ஞாபக்த்தில் வருவதைக் கொண்டும், வலையில் ஆதாரம் கிட்டுவதைக் கொண்டுமே நான் வரிசைப் படுத்தியுள்ளேன். ஏதேனும் தவறிருந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டவும். நன்றி.

மதீனாவின் பழைய காலம் அது. எங்கெங்கு நோக்கினும் ஹதீத்களையும் குர்'ஆனையும் படிக்கவும், மனப்பாடம் செய்யவும், அதை ஆராய்ந்து அறியவும், அதன் மூலம் பல துறைகளில் அறிவை வளர்த்தவும் என ஆலிம்களாலும், தாபயீன்க‌ளாலும், சில சஹாபாக்களாலும் மதீனாவின் தெருக்கள் நிறைந்திருந்த காலம் அது. அத் தெருக்களின் வழியே அச்சிறுவன் சென்று கொண்டிருந்தான். புறாக்களை துரத்துவதிலும், பாடித் திரியும் நாடோடிகளை பின் தொடரவுமே அவனின் நேரம் சரியாக இருந்தது. அதனால் அவன் படிக்கவில்லை என்றில்லை, என்றாலும் கல்விக்கும், ஞானத்திற்கும் புகழ் பெற்ற அந்த குடும்பத்தில் இச் சிறுவனைப் பற்றிய கவலை தொடர்கதையானது.

தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருப்பினும், நல்வழியிலேயே அச்சிறுவனை நேர்வழியில் கொண்டு வர நினைத்தார். எனவே ஓர் நாள், ஓர் போட்டி வைத்தார், அச் சிறுவ‌னும் அவனின் அண்ணனும் அதில் பங்கு பெற்றனர். அச் சிறுவனின் தந்தை ஓர் கேள்வியை கேட்டார். அச் சிறுவன் தவறான பதிலை கூறினான், அவனின் அண்ணன் சரியான விடையை கூறினார். தந்தை அச் சிறுவனைப் பார்த்து கூறினார்,
"பறவைகளிடத்தில் நீ செலுத்தும் நேரம் உன்னை கல்வியிலிருந்து தூரமாக்கி விட்டது என்றே எண்ணுகின்றேன்".
சிறுவன் வெட்கி தலை குனிந்தான், பின் கூறினான்.
"நான் இந்த படிப்பிலெல்லாம் கவனம் செலுத்தப் போவதில்லை. நானும் பிரபல பாடகனாக போகின்றேன்".
அச்சிறுவனின் தாய் கூறினார்,
"நல்ல குரல்வளம் இல்லையென்றால் நல்ல களையான முகமிருந்தும் பலனில்லை"
சிறுவன் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான். என்ன செய்ய? அத் தாய் கூறினார்,
"இசை உன்னை உயர கொண்டு செல்லாவிட்டாலும் ஞானம் உன்னை வெகு உயரத்தில் கொண்டு சேர்க்கும்"
மறுநாள் அத்தாய், அக்காலத்தில் ஆலிம்களும் அவர்தம் மாணவ‌ர்களும் உடுத்தும் உடைகளைப் போன்ற உடைகளை கொண்டு வந்தார். அதை கண்டவுடன் அச் சிறுவன், மிகவும் மகிழ்ச்சியடைந்து எப்படி படிக்க போவது, எப்படி ஞானத்தை தேடுவது என்று கேட்டான். அத்தாய் அந்த உடைகளை அச்சிறுவனுக்கு உடுத்தி பின்னர் கூறினார்.
"ராபியா என்னும் ஆசிரியரிடம் போய் சேர்வாயாக. ஆனால், அவரிடமிருந்து கல்வி கற்கும் முன்னர் அவரின் அதபை (ஒழுக்கங்களை) கற்பாயாக!
என்று கூறினார். அத்தாய் சரியான நேரத்தில் பக்குவப் ப‌டுத்தி கல்வி கற்க அனுப்பிய அச் சிறுவனே இன்று ஹதீதுகளின் விஷயத்தில் நட்சத்திரமாய் மின்னுபவர் என அவரின் மாண‌வர்களால் புகழப்பட்ட, இன்றும் புகழப்படுகின்ற இமாம் மாலிக்.

பாடம்:

1. குழந்தைகளை நேர்வழிப்படுத்த வன்முறையை உபயோகப் படுத்தாதீர். அன்பாய், பக்குவமாய் அவர்களை அணுகுங்கள்.
2. குழந்தையின் ஆசிரியர் விஷயத்தில் கவனமாய் இருங்கள். ஞானம் மட்டும் ஒரு மனிதனை முழுமைப் படுத்தாது, அவனின் ஒழுக்கங்களே அவனைப் பற்றி காலாகாலத்திற்கும் பேசும். எனவே ஒழுக்கத்தில் சிறந்த மனிதரையே ஆசிரியராக தேர்ந்தெடுங்கள். அவர் மற்றவர்களைவிடவும் ஞானத்தில் குறைந்தவராக இருப்பினும் சரி.
3. சரியான நேரத்தில் பக்குவப் படுத்துவதே அவர்களின் வாழ்வில் இறுதி வரை கை கொடுக்கும். குழந்தைதானே, வளர்ந்தபின் சரி செய்து கொள்ளலாம் என அப்பொழுதும் எண்ணாதீர்கள். பின் சமயமே கிட்டாது.
    இமாம் மாலிக் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

    இன்னும் பல வைரங்களை பார்க்கலாம்.
    மீண்டும் சந்திப்போம்.
    அதுவரை தேவை து'ஆ.
    வஸ்ஸலாம்.

    May 30, 2010

    நஸீஹா

    இறுதியில் நாங்கள் அப்பாவின் இடத்திற்கு வந்தபின், பாதுகாவலர் என்னையும், என் தங்கை லைலாவையும் அப்பாவின் இடத்திற்கு அழைத்து சென்றார். எப்பொழுதும் போல அப்பா கதவின் பின் ஒளிந்து, எங்களை பயமுறுத்துவதற்காக காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் சந்தித்தோம், பின் ஓர் நாளில் எவ்வளவு முடியுமோ அத்தனை அரவணைப்பும், அன்பின் வெளிப்பாடாக முத்தங்களும் பகிரப்பட்டன.

    எங்கள் தந்தை எங்களை நன்கு கூர்ந்து கவனித்தார். பின் என்னை அவர் மடியில் அமரச்செய்து என் வாழ்நாளில் எக்கணமும் மறக்க முடியாத ஓர் அறிவுரையை கூறினார். என் கண்களை நேருக்கு நேர் நோக்கி என் தந்தை கூறினார்,
        " ஹன்னா, இவ்வுலகில் மிகவும் விலையுயர்ந்த‌ பொருட்களை இறைவன் மிகவும் பத்திரமான, மறைவான, எளிதில் எவரும் அடையமுடியாத இடங்களில் படைத்துள்ளான். வைரங்களை நீ எங்கே பெறுகிறாய்? நிலத்தினுள் வெகு ஆழத்தில், மறைவான, பாதுகாப்பான இடத்தில். முத்துக்களை எங்கே பெறுகிறாய்? கடலின் அடியில் அழகிய சிற்பிகளை கொண்டு மறைக்கப்ப‌ட்டு, பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து. தங்கத்தை எங்கிருந்து பெறுகிறாய்? சுரங்கங்களில் அடுக்கடுக்காய் பாதுகாப்பளிக்கும் பெரும் பெரும் பாறைகளின் பின்னாலிருந்து. கடின உழைப்பின் மூலம் மட்டுமே அவற்றை நாம் அடைய முடியும்."

    பின் என் தந்தை அவரின் கண்களில் தீர்க்கத்தையும் சிரத்தையையும் வெளிப்படுத்தி என்னை நோக்கி கூறினார்,
        " உன்னுடைய உடலும் மிக புனிதமானது, விலைமதிப்பற்றது. நீ வைரங்களையும், முத்துக்களையும் விட விலையுயர்ந்தவள். எனவே நீயும் உன் உடலை போர்த்தி பாதுகாத்து வைக்க வேண்டும்"

    இந்த பதிவு தந்தைகளுக்கு மட்டும் அல்ல, தாய்களுக்கும்தான். ஆனால் மிக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இங்கு தந்தையே நேரடியாக பிள்ளைகளிடம், தெளிவாக நேர்மையாக, சுற்றி வளைக்காமல், கோபப்படாமல், அவர்களை மனம் வெறுக்க செய்யாமல் அதே சமயம் அவர்கள் மனதில் என்றென்றைக்கும் மறக்காமல் தங்கக் கூடிய அளவில் அறிவுரை கூறியதுதான். நாமும் நம் பிள்ளைகளிடம் இதேபோல் பேச கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகளைப் பார்த்துவிட்டு தாயிடம் நாம் கோபப்படுகிறேம்,"என்ன விதமான ஆடைகளை உடுத்த நீ அனுமதித்தாய்?" என்றோ அல்லது "இனிமேல் இத்தகைய ஆடைகளை அணிய வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிடு" என்று கூறுகின்றோம். இதனால் பிள்ளைகள் மனதில் என்ன எண்ணம் வருகின்றது? ஆஹா...தந்தை ஒன்றும் சொல்வதில்லை, தாயே பட்டிக்காடாக இருக்கின்றாள், தாய்க்கு நாம் நாகரீகமாக உடை உடுத்துவது பிடிக்கவில்லை என்றுதான் நினைப்பார்கள். இதுவே அவர்களை தாய்க்கு எதிராக திசை திருப்புவதுடன் உண்மையில் ஏன் என்ற காரணத்தை விளங்காமலே போக வைத்துவிடும். அதுவுமன்றி, இஸ்லாத்தில் பிள்ளைகளை சரிவர வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு மட்டுமன்றி தந்தைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. எனெவே, நாம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்றோ, தாயே இதை சரி செய்ய வேண்டும் என்றோ நினைக்காமல் தந்தையும் பொறுப்பை சரி வர செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ், அல்லஹ் நம்மை நல்லதொரு தாயாக, நல்லதொரு தந்தையாக வாழ கிருபை செய்வானாக.

    நபிமொழி :
        உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: உமர் (ரலீ)-நூல்: அபூதாவூத் 1412

        அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர்:அனஸ் பின் மாலீக்(ரலீ­)-நூல் : முஸ்­லிம்(5127)

        ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிரி­ருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், '''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திரிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.  அறிவிப்பவர்:ஆயிஷா (ர­)-நூல் : புகாரி(1418)

        ''யார் இந்தப் பெண் குழந்தைகளால் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)-நூல் : புகாரி(5995)


    மீண்டும் சந்திப்போம்.
    அதுவரை தேவை து'ஆ.

    May 26, 2010

    வாழ்த்துக்கள் ஜாஸ்மின்

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஜாஸ்மின்,

    உன் எண்ணங்கள் யாவும் ஈடேறி, நீ இன்னும் மென்மேலும் உயர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். வாழ்த்துக்கள்! உனக்கும், உன் தாய் தந்தையர்க்கும்.

    வ ஸலாம்.

    யார் இந்த ஜாஸ்மின்?
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

    தமிழ் - 98
    ஆங்கிலம் - 99
    கணிதம் - 100
    அறிவியல் - 100
    சமூக அறிவியல் - 98

    மொத்தம் - 495


    courtesy: http://www.tutyonline.net/view/31_4228/20100526092332.html

    May 24, 2010

    குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 2)

    பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர் ரஹீம்.

    கடந்த பதிவில் குழந்தையின் கல்வி என்பது நம் திருமணத்திற்கு முன்பே திட்டமிடப் பட வேண்டியது என்று கூறியிருந்தேன். திருமணமான பின்பும் கணவன் மனைவி எவ்வாறு தம் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளலாம் என அலசுவோம்.


    1. முதலாவதாக தீனை நல்ல முறையில் பேணும் ஆண் (அ) பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    ஆதாரம் 1: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

    ஆதாரம் 2:மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி

    2. இரண்டாவதாக தங்கள் கணவனைப் பற்றியோ (அ) மனைவியைப் பற்றியோ வெளியிடத்தில் குறை சொல்லாத, காண்பித்துக் கொடுக்காத உறவு வேண்டும்.
    ஆதாரம்: அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

    மேற்கண்ட ஆதாரம் ஒரு காரணத்துக்காக மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களுக்காக தரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நபிகளாரின் (ஸல்) வாழ்வையே எடுத்துக் கொள்ளுங்கள். நபியவர்களுக்கு (ஸல்) முதன் முதலில் வஹீ வந்ததும் அவர் தஞ்சமடைந்தது யாரிடம்? சித்தப்பாவிடமோ, உற்ற தோழர்களிடமோ அல்ல, மாறாக, தன் மனைவியிடம், புதிய அனுபவம் ஒன்று கிடைத்ததையும் அதனால் உற்ற பயத்தையும் யாரிடம் பகிர்ந்தார்கள்? தன் மனைவியிடம், இன்னும் கதீஜா (ரலி) அவர்களின் மேன்மையையும் பாருங்கள். தன் கணவர் பொய் கூறுவார் எனவோ, கனவு கண்டிருப்பார் எனவோ ஒரு கணம் கூட சிந்திக்க வில்லை. மாறாக, உண்மை என நம்பினார், அத‌ன் பின் நபியவர்களுக்கு (ஸல்) ஆதரவான சொற்களை கூறினார், பின் இன்னும் மனம் நிம்மதியடைய தன்னுடைய உறவினர், அதுவும் ஞானம் மிக்கவர் என்று கருதப்பட்டவ‌ரிடம் கொண்டு சென்றார். உதாசீனப் படுத்தவில்லை, உண்மையல்ல என ஒரு க்ஷ‌ணம் கூட நினைக்கவில்லை. இத்தகைய ஒரு பாதுகாப்பை திருமண உறவு ஒன்றே தரமுடியும். எனவேதான் அல்லாஹ் த ஆலா, பாதுகாப்பு அளிக்கக் கூடிய, கவசமாய் இருக்கக்கூடிய, உங்கள் இரகசியங்களை மறைக்கக் கூடிய, உங்களுக்கு மதிப்பை தேடி தரக் கூடிய (ஆம், ஆடையில்லா மனிதனுக்கு மதிப்புண்டோ?) ஒரு ஆடையாக திருமண உறவை தேடுங்கள் என்று கூறுகின்றான்.

    3. அப் பெண்ணிடத்தில் அழகு இருக்கின்றது, வசதி இருக்கின்றது, இன்னும் மனம் விரும்பியவாறு இருக்கின்றாள் என்றெல்லாம் நினைத்து வேற்று மார்க்கத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம். அல்லாஹ் நாடினால் அவளை இஸ்லாத்திற்கு மாற்றிவிடுவார் என குருட்டம்போக்கு சிந்தனை வேண்டாம்.
    ஆதாரம்: இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)

    இணை வைக்கும் ஒரு பெண்ணை விட இஸ்லாத்தின் பால் நம்பிக்கை கொண்ட அடிமையே மேல் என நபியவர்களும் (ஸல்) வாக்குரைத்திருக்கின்றனர்.
    4. நன்னடத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ஆதாரம்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    இந்த ஹதீத் ஆண்களுக்கும் பொருந்தும். எவ்வாறு? ஹலாலான‌ முறையில் பொருளீட்டி குடும்பத்தை ஹலாலான வழியில் மகிழ்ச்சி கொள்ள வைக்க வேண்டும். மேலும் மனைவியிடமும் மற்றவர்களிடமும் நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் சில சமயங்களில் வெறுப்பூட்டும்படி நடந்து கொள்வது இயல்பே. ஏனெனில் நாம் எல்லாருமே குற்றம் புரியக் கூடிய, பலவீனமான மனிதர்களே. அவ்வேளைகளிலும் பொறுமையுடன் குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உள்ளது.
    ஆதாரம் 1: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    “எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    ஆதாரம் 2:பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    ஆதாரம் 3: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)

    மனைவியை வெறுக்காமல், தன்னிடமும் கோபம் உண்டு என்ற விதத்தில் நடக்க வேண்டும். இன்னும் கவனித்தால், இது போன்ற சண்டை சச்சரவுகள் குழந்தைகளின் மனதில் அழியா சுவடுகளை ஏற்படுத்திவிடும். இன்னும் தாய் தந்தை மேல் மதிப்பையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். இன்னும் பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எதிர்காலத்தில் தாய் தந்தையாய் வழி காட்ட வேண்டிய பொறுப்புள்ளதை எண்ணி, கணவன், மனைவி இருவருமே தத்தம் குணங்களை மேம்படுத்தி வாழ வேண்டும்.

    5. திருமணத்திற்கு பிறகும் தாய் தந்தையரை பேண வேண்டும்.தாய் தந்தையை பேணிக் காப்பது எல்லோர் மீதும் கடமையாகின்றது. பெண்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே திருமணத்திற்கு பின்பும் தாய் தந்தையரை பேணிக் காக்க வேண்டும். அனைத்து உறவுகளையும் பேணிக் காப்பவர்களாக இருத்தல் நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பண்புகளை யாரும் கற்பித்து தராமலே பழகிக் கொள்ளக் கூடிய இனிய சூழலை தரும்.
    ஆதாரம் 1: பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
    நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14)

    ஆதாரம் 2: இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83)

    ஆக, நற்குணமுள்ள கணவன் மனைவியே நல்ல குழந்தைகளை, அல்லாஹ்விற்கு பிரியமான செல்வங்களை பெற்றெடுக்கவும், வளர்க்கவும் முடியும். உடனே, இதனை படித்த பின் கணவனிடமோ, மனைவியிடமோ பயான் செய்ய ஆரம்பித்து விடாதீர்கள். முதலில் உங்களை சிறிது சிறிதாக மாற்றுங்கள். பின் உங்கள் செயல்கள் மூலம் மற்றவரிடம் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது இல்லை. முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்வினிடத்தில் அப்படிப்பட்ட குணத்தையும், வாழ்வையும் தர அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

    தேவை து'ஆ

    May 20, 2010

    குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 1)

    பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர் ரஹீம்.

    ஒரு மனிதன் அந்த அறிஞரிடம் வந்து கேட்டான். "அறிஞரே என்னுடைய குழந்தைக்கு எப்பொழுதிலிருந்து மார்க்கத்தை (வாழும் முறையை) கற்றுத்தர ஆரம்பிக்க வேண்டும்?" அறிஞர் கேட்டார்," உன்னுடைய குழந்தைக்கு வயது என்னவாகின்றது?" அந்த மனிதன் கூறினான்,"இரண்டு மாதங்கள் ஆகின்றது" அறிஞர் கூறினார், "அடடா... காலம் கடந்து விட்டது"


    1. முதலாவதாக தீனை நல்ல முறையில் பேணும் ஆண் (அ) பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    ஆதாரம் 1: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

    ஆதாரம் 2:மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி

    2. இரண்டாவதாக தங்கள் கணவனைப் பற்றியோ (அ) மனைவியைப் பற்றியோ வெளியிடத்தில் குறை சொல்லாத, காண்பித்துக் கொடுக்காத உறவு வேண்டும்.
    ஆதாரம்: அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

    மேற்கண்ட ஆதாரம் ஒரு காரணத்துக்காக மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களுக்காக தரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நபிகளாரின் (ஸல்) வாழ்வையே எடுத்துக் கொள்ளுங்கள். நபியவர்களுக்கு (ஸல்) முதன் முதலில் வஹீ வந்ததும் அவர் தஞ்சமடைந்தது யாரிடம்? சித்தப்பாவிடமோ, உற்ற தோழர்களிடமோ அல்ல, மாறாக, தன் மனைவியிடம், புதிய அனுபவம் ஒன்று கிடைத்ததையும் அதனால் உற்ற பயத்தையும் யாரிடம் பகிர்ந்தார்கள்? தன் மனைவியிடம், இன்னும் கதீஜா (ரலி) அவர்களின் மேன்மையையும் பாருங்கள். தன் கணவர் பொய் கூறுவார் எனவோ, கனவு கண்டிருப்பார் எனவோ ஒரு கணம் கூட சிந்திக்க வில்லை. மாறாக, உண்மை என நம்பினார், அத‌ன் பின் நபியவர்களுக்கு (ஸல்) ஆதரவான சொற்களை கூறினார், பின் இன்னும் மனம் நிம்மதியடைய தன்னுடைய உறவினர், அதுவும் ஞானம் மிக்கவர் என்று கருதப்பட்டவ‌ரிடம் கொண்டு சென்றார். உதாசீனப் படுத்தவில்லை, உண்மையல்ல என ஒரு க்ஷ‌ணம் கூட நினைக்கவில்லை. இத்தகைய ஒரு பாதுகாப்பை திருமண உறவு ஒன்றே தரமுடியும். எனவேதான் அல்லாஹ் த ஆலா, பாதுகாப்பு அளிக்கக் கூடிய, கவசமாய் இருக்கக்கூடிய, உங்கள் இரகசியங்களை மறைக்கக் கூடிய, உங்களுக்கு மதிப்பை தேடி தரக் கூடிய (ஆம், ஆடையில்லா மனிதனுக்கு மதிப்புண்டோ?) ஒரு ஆடையாக திருமண உறவை தேடுங்கள் என்று கூறுகின்றான்.

    3. அப் பெண்ணிடத்தில் அழகு இருக்கின்றது, வசதி இருக்கின்றது, இன்னும் மனம் விரும்பியவாறு இருக்கின்றாள் என்றெல்லாம் நினைத்து வேற்று மார்க்கத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம். அல்லாஹ் நாடினால் அவளை இஸ்லாத்திற்கு மாற்றிவிடுவார் என குருட்டம்போக்கு சிந்தனை வேண்டாம்.
    ஆதாரம்: இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)

    இணை வைக்கும் ஒரு பெண்ணை விட இஸ்லாத்தின் பால் நம்பிக்கை கொண்ட அடிமையே மேல் என நபியவர்களும் (ஸல்) வாக்குரைத்திருக்கின்றனர்.
    4. நன்னடத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ஆதாரம்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    இந்த ஹதீத் ஆண்களுக்கும் பொருந்தும். எவ்வாறு? ஹலாலான‌ முறையில் பொருளீட்டி குடும்பத்தை ஹலாலான வழியில் மகிழ்ச்சி கொள்ள வைக்க வேண்டும். மேலும் மனைவியிடமும் மற்றவர்களிடமும் நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் சில சமயங்களில் வெறுப்பூட்டும்படி நடந்து கொள்வது இயல்பே. ஏனெனில் நாம் எல்லாருமே குற்றம் புரியக் கூடிய, பலவீனமான மனிதர்களே. அவ்வேளைகளிலும் பொறுமையுடன் குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உள்ளது.
    ஆதாரம் 1: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    “எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    ஆதாரம் 2:பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    ஆதாரம் 3: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)

    மனைவியை வெறுக்காமல், தன்னிடமும் கோபம் உண்டு என்ற விதத்தில் நடக்க வேண்டும். இன்னும் கவனித்தால், இது போன்ற சண்டை சச்சரவுகள் குழந்தைகளின் மனதில் அழியா சுவடுகளை ஏற்படுத்திவிடும். இன்னும் தாய் தந்தை மேல் மதிப்பையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். இன்னும் பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எதிர்காலத்தில் தாய் தந்தையாய் வழி காட்ட வேண்டிய பொறுப்புள்ளதை எண்ணி, கணவன், மனைவி இருவருமே தத்தம் குணங்களை மேம்படுத்தி வாழ வேண்டும்.

    5. திருமணத்திற்கு பிறகும் தாய் தந்தையரை பேண வேண்டும்.தாய் தந்தையை பேணிக் காப்பது எல்லோர் மீதும் கடமையாகின்றது. பெண்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே திருமணத்திற்கு பின்பும் தாய் தந்தையரை பேணிக் காக்க வேண்டும். அனைத்து உறவுகளையும் பேணிக் காப்பவர்களாக இருத்தல் நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பண்புகளை யாரும் கற்பித்து தராமலே பழகிக் கொள்ளக் கூடிய இனிய சூழலை தரும்.
    ஆதாரம் 1: பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
    நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14)

    ஆதாரம் 2: இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83)

    ஆக, நற்குணமுள்ள கணவன் மனைவியே நல்ல குழந்தைகளை, அல்லாஹ்விற்கு பிரியமான செல்வங்களை பெற்றெடுக்கவும், வளர்க்கவும் முடியும். உடனே, இதனை படித்த பின் கணவனிடமோ, மனைவியிடமோ பயான் செய்ய ஆரம்பித்து விடாதீர்கள். முதலில் உங்களை சிறிது சிறிதாக மாற்றுங்கள். பின் உங்கள் செயல்கள் மூலம் மற்றவரிடம் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது இல்லை. முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்வினிடத்தில் அப்படிப்பட்ட குணத்தையும், வாழ்வையும் தர அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

    தேவை து'ஆ

    May 16, 2010

    வீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி தர இயலுமா?

    அஸ்ஸலாமு அலைக்கும் வ‌ ரஹ்மத்துல்லாஹ்.

    இந்த பதிவு எழுதுவதின் நோக்கம், இந்த வலைப்பூவை எந்த அளவு நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கலாம் என்பதுதான். அதிகமாக இஸ்லாமிய கல்வியை போதிக்கும் முறைகளையே இங்கு காண முடியும் என்றாலும் இதே வழிமுறைகளை உபயோகித்தோ அல்லது தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்தோ எல்லா குழந்தைகளுக்கும் தாயே நல்ல கல்வி அளிக்க இயலும் என்பதே உண்மை. இதற்கென்று தனியாக படிப்போ தகுதியோ தேவையில்லை என்பதும் நிதர்சன உண்மை. எல்லாம் நாம் பயன்படுத்தும் வழிமுறையில்தான் இருக்கின்றது. சரி, விஷயத்துக்கு வருவோம்.

    நான் படித்ததெல்லாம் இந்தியாவில் மாநகராட்சி பள்ளியில்தான் என்றாலும், கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் சராசரி அளவில் வெறும் மனப்பாடம் செய்வதையும், தகவல் களஞ்சியமாக மாற்றுவதற்கே தவிர பிள்ளைகளுக்கு வேறு எதனையும் சொல்லித் தருவது இல்லை என்பதே என் வாக்கு. இல்லை என்று வாதிடுபவர்கள் சமீபத்தில் வெளி வந்த ஆமீரின் 'தாரே ஜமீன் பர்' படத்தை ஒரு தடவை பாருங்கள். அதன் பின் அதைப் பற்றி விவாதிக்கலாம். இந்த பிரச்சினை இந்தியா போன்ற வளரும் அல்லது வளர்ச்சி அடையாத நாடுகளுக்கே அன்றி இப்பொழுது அதிகமாக வேலை விஷயமாக அயல் நாடுகளில் வாழ்பவர்கள் இதைப் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை என்றால் மீண்டும் கூறுகின்றேன், கூகுள் மாமாவையே கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு நாட்டின் கல்வி திட்டமும் எப்படி உள்ளது என.

    உதாரணமாக, நாம் குழந்தைக்கு நம்மை மற்றும் சகல் ஜீவராசிகளைப் படைத்தது இறைவன் என கூறி வைப்போம் ஆனால், பள்ளிகளில் டார்வின் தியரி கட்டாய பாடம், அதைப் படித்து மனப்பாடம் செய்து தேர்வில் சரியாக எழுதினால் மட்டுமே குழந்தை அடுத்த வகுப்பிற்கு போக முடியும். இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு எவ்வாறு படைப்பின் அருமையை விளக்குவீர்கள்?

    இன்னொரு உதாரணம் சொல்லுகின்றேன். இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் தற்போது 'DRUG FREE ZONE' என்று போர்டு மாட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. தங்கள் பிள்ளை படிக்கும் பள்ளி உண்மையில் 'DRUGS FREE'யா? அல்லது மேற்பூச்சா என்பதை எப்படி பரிசோதிப்பீர்கள். அங்கு படிக்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளையை தப்பான வழிக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை எப்படி உறுதி படுத்துவீர்கள்?

    இன்னும் சில சகோதர சகோதரிகளின் வாதம் என்னவெனில் மற்ற பிள்ளைகளுடன் பின்பு எப்படி பழகுவார்கள்? குழந்தைகளுக்கு தீயது எது என்று காட்டாவிட்டால், நல்லதின் தாக்கம் அவர்களுக்கு எப்படி புரியும் என்பது. அவர்களுக்கு என்ன சொல்வது? குழந்தைகள் மாசு மருவற்ற உள்ளத்தோடு பிறக்கின்றார்கள். தொடக்ககாலத்திலேயே அவர்களுக்கு நல்லதை காண்பித்து, பழக்கி விட்டால் பின்பு தீயதை காண நேரும்போதும் சரி அதை கடந்தே ஆக வேண்டிய சூழ் நிலையிலும் சரி அவர்களின் உறுதி அழியாது. ஆனால் தொடக்கத்திலேயே அவர்களுக்கு தீயதை பழக வேண்டிய சூழ்நிலையை நாமே உருவாக்கிக் கொடுத்தால்?

    இளம்பிஞ்சுகளை தங்களின் உடல் பசிக்காக உபயோகிப்பதும் பல பள்ளிகளில் நடக்கின்றது. நாம், நம் பிள்ளைகளைவிடவும் அயலார்மீது அதிக நம்பிக்கை வைத்து நம் பிள்ளைகளை அவர்களின் சொல்படி நடக்குமாறு பணிக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் பிள்ளைகள் யார் மீது நம்பிக்கை வைப்பர்? பின் வளர்ந்தபின் அதன் தாக்கம் யார் மீது வீழும்?

    இன்னும் பல விவாதங்களை காணலாம் எனினும் மேலும் உங்களின் பல கேள்விகளுக்கு கூகுளில் தேடுவதாலேயே நிறைய விடைகள் கிடைக்கும். அடுத்த பதிவில் இது போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் இன்னும் '' பற்றி புரிந்து கொள்ள தேவையான தகவல் வலைகளையும் கொடுக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.

    மீண்டும் சந்திப்போம்.
    அதுவரை தேவை து'ஆ.
    வஸ்ஸலாம்.