December 25, 2015

‪குழந்தைநேயப்பள்ளிகள்‬ - ஒரு கலந்துரையாடல்

கடந்த நவம்பர் இறுதியில் ‘குழந்தை நேயப் பள்ளிகள்’ மண்டலக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி மேடம் அழைத்திருந்தாலும், கடும் மழை காரணமாக என்னால் அதில் பங்கெடுக்க இயலவில்லை. அதன் பின் வந்த நாட்களிலும் மழையே செய்தித்தாள்களிலும், நிகழ்வுகளிலும் மிகுந்த முக்கியமான இடத்தை பிடித்துக்கொண்டது. அவருடன் மீண்டும் பேசும் வாய்ப்பும் நேரமும் அமையவேயில்லை. எனவே இம்முறை நடக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கும்படி அழைப்பு வந்ததும், எப்படியேனும் கலந்துகொள்ளவேண்டும் என்னும் உத்வேகம் தொற்றி இருந்தது.
ஒரு பள்ளியை, சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலிருந்தும் வரும் பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக, உவப்பானதாக, பயனுடையதாக, அவர்களின் கற்றலார்வத்திற்கு பாதை அமைத்துத் தரும் வெளியாக எப்படி மாற்றுவது. இந்த நோக்கத்தில் கற்பித்தலை, உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் எப்படி அணுகுவது போன்ற கருத்துக்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனதில் விதைப்பதும், அதன் வெளிப்பாடுகளை சரியான கோணத்தில் கொண்டு செல்வதற்காகவும் 2009இல் சில அரசு ஆசிரியர்களாலும், குழந்தைகளின் கல்வி மேல் அக்கறை கொண்ட ஆர்வலர்களாலும் தொடங்கப்பட்டதே இந்த ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’அமைப்பு.
பல்வேறு களங்களிலும், தளங்களிலும், சூழல்களிலும் கடந்த ஆறூ வருடமாகக் கடந்து வந்த பாதையை சற்றே ஆசுவாசத்துடன் திரும்பிப் பார்ப்பதே இன்றைய கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா. இருக்கின்றது.
ஏன் HomeSchooling / வீட்டுக்கல்வியை நான் தேர்ந்தெடுக்க வேண்டும், காரணங்கள் என்ன. ஒட்டு மொத்த உலகமும் மறுபேச்சு பேசாமல் தத்தம் குழந்தைகளை தங்களின் வசதிக்கேற்ப ஒரு பள்ளியில் சேர்க்கும்போது, பள்ளிக்கூடத்திற்கே எனக்கு அனுப்ப மனமில்லை என முடிவெடுக்க காரணம் என்ன என்னும் கோணத்தில் பேசுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். ஐந்து நிமிட அறிமுகம் மட்டுமே இது என்றாலும் அங்கு வந்திருந்த அத்தனை ஆசிரியர்களிடமும் ஒரு அவநம்பிக்கை கலந்த ஆச்சரியத்தைக் காண முடிந்தது. நேரமின்மையின் காரணமாக ஒரு சுருக்கமான உரையுடன் முடித்துக் கொண்டேன். இன் ஷா அல்லாஹ், இன்னும் விரிவாக புரிய வைக்க ஒரு வாய்ப்பை எதிர்நோக்குகின்றேன்.
என் பயணத்தினை விடவும், இந்த அவசர, இயந்திர உலகில் இன்னும் குழந்தைகளின் மென்மையான, மிக மெதுவாக நகரும் உலகத்தினுள் கலந்து அவர்களை, அவர்களின் விருப்பப்படி, அவர்களின் உவப்பை நாடி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் இருபதிற்கும் மேலாக வந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் பயணமும், பார்வையும், அவர்கள் எடுக்கும் சிரமங்களும், நிர்ப்பந்தங்களுக்கும், சூழ்நிலைக் கைதுகளுக்கும் நடுவிலும் தன்னால் இயன்ற அளவிற்கு Child friendly school ஆக தங்கள் பள்ளியை மாற்ற அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும், அதன் வெற்றி தோல்விகளையும் கலந்தாய்வு செய்ததும், விடுமுறை நாட்களையும் இதற்கென ஒதுக்கிட முன்வந்ததையும் பார்த்து உண்மையில் மகிழ்கிறேன். எதிர்காலத்தை நமபகமான கைகளில்தான் ஒப்படைக்க இருக்கிறோம் என.
ஒவ்வொரு ஆசிரியரும் சொன்ன விடயங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், குறைகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, எந்தப் பள்ளியில் பயிற்றூவிக்கும் ஆசிரியரும் இன்னும் மாறுபட்ட, பண்பட்ட கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க இயலும். ஆசிரிய சமுதாயத்திற்கும், குழந்தைகளின் தனித்துவத்திற்கும், அவர்களின் வாழ்க்கைக்கல்விக்கும் இடையே உலகாயுதவாதிகளால், பொருள்முதல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியை இந்த அமைப்பும், அதன் சேவைகளும் நிரப்பும் என நம்பிக்கை கொள்கிறேன்.
இரண்டு ஹைலைட்ஸ் :
எல்லோரின் அறிமுகமும் முடியும் வேளையில் கூடியிருந்தவர் அனைவர் சார்பாகவும், எனக்கு மீலாத் நபி வாழ்த்துக்களைச் சொன்ன ஆசிரியை... smile emoticon smile emoticon smile emoticon
கூட்டம் முடியும் முன், என் கை பிடித்து, எனக்கு நீங்கள் கூறிய உங்கள் குழந்தையின் இயல்புகள், அவனின் அறீவுப்பசிக்கு தீனி போட இயலாத இயலாமைகள் என எல்லாம் புரிகிறது. என் மகனின் விஷயத்திலும் இதையே நானும் சந்தித்துள்ளேன். ஆனாலும் பள்ளியிலிருந்து நிறுத்தும் தைரியம் இருக்கவில்லை. நீங்கள் முன்னேறுங்கள் எனப் பாராட்டிய ஆசிரியை... smile emoticon smile emoticon smile emoticon
இவையெல்லாவற்றையும் விட, வீடு திரும்பும் வழி முழுதும் என்னுடனேயே பயணித்த தோழர்.மலர்விழி மேடத்தை அறிந்து கொள்ளவும் அருகிலிருந்து அவரிடமிருந்து கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்து, ஒரே அலைவ்ரிசையில் உரையாடும் வாய்ப்பு பெற்றதை, நிச்சயம் வரமாய் உணர்கிறேன். இன்னும் அதிகம் அவருடன் பணிபுரியவும் எல்லையில்லா ஆசை மேலெழுகிறது. தமிழகக் குழந்தைகளின் கல்வி வரலாற்றில் நிச்சயம் அழுத்தமான ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஆளுமை அவர்.
ஒரு விதை மிக ஆழமாக ஊன்றப்பட்டுள்ளதை அறிகிறேன். வேர்பரப்பவும் நிழல் தரவும் வளரும் நாளை எதிர்நோக்குகின்றேன்.
வாழ்த்துக்கள் தோழர்களே!!!
===================================
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

No comments:

Post a Comment