May 16, 2010

வீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி தர இயலுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ‌ ரஹ்மத்துல்லாஹ்.

இந்த பதிவு எழுதுவதின் நோக்கம், இந்த வலைப்பூவை எந்த அளவு நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கலாம் என்பதுதான். அதிகமாக இஸ்லாமிய கல்வியை போதிக்கும் முறைகளையே இங்கு காண முடியும் என்றாலும் இதே வழிமுறைகளை உபயோகித்தோ அல்லது தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்தோ எல்லா குழந்தைகளுக்கும் தாயே நல்ல கல்வி அளிக்க இயலும் என்பதே உண்மை. இதற்கென்று தனியாக படிப்போ தகுதியோ தேவையில்லை என்பதும் நிதர்சன உண்மை. எல்லாம் நாம் பயன்படுத்தும் வழிமுறையில்தான் இருக்கின்றது. சரி, விஷயத்துக்கு வருவோம்.

நான் படித்ததெல்லாம் இந்தியாவில் மாநகராட்சி பள்ளியில்தான் என்றாலும், கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் சராசரி அளவில் வெறும் மனப்பாடம் செய்வதையும், தகவல் களஞ்சியமாக மாற்றுவதற்கே தவிர பிள்ளைகளுக்கு வேறு எதனையும் சொல்லித் தருவது இல்லை என்பதே என் வாக்கு. இல்லை என்று வாதிடுபவர்கள் சமீபத்தில் வெளி வந்த ஆமீரின் 'தாரே ஜமீன் பர்' படத்தை ஒரு தடவை பாருங்கள். அதன் பின் அதைப் பற்றி விவாதிக்கலாம். இந்த பிரச்சினை இந்தியா போன்ற வளரும் அல்லது வளர்ச்சி அடையாத நாடுகளுக்கே அன்றி இப்பொழுது அதிகமாக வேலை விஷயமாக அயல் நாடுகளில் வாழ்பவர்கள் இதைப் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை என்றால் மீண்டும் கூறுகின்றேன், கூகுள் மாமாவையே கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு நாட்டின் கல்வி திட்டமும் எப்படி உள்ளது என.

உதாரணமாக, நாம் குழந்தைக்கு நம்மை மற்றும் சகல் ஜீவராசிகளைப் படைத்தது இறைவன் என கூறி வைப்போம் ஆனால், பள்ளிகளில் டார்வின் தியரி கட்டாய பாடம், அதைப் படித்து மனப்பாடம் செய்து தேர்வில் சரியாக எழுதினால் மட்டுமே குழந்தை அடுத்த வகுப்பிற்கு போக முடியும். இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு எவ்வாறு படைப்பின் அருமையை விளக்குவீர்கள்?

இன்னொரு உதாரணம் சொல்லுகின்றேன். இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் தற்போது 'DRUG FREE ZONE' என்று போர்டு மாட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. தங்கள் பிள்ளை படிக்கும் பள்ளி உண்மையில் 'DRUGS FREE'யா? அல்லது மேற்பூச்சா என்பதை எப்படி பரிசோதிப்பீர்கள். அங்கு படிக்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளையை தப்பான வழிக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை எப்படி உறுதி படுத்துவீர்கள்?

இன்னும் சில சகோதர சகோதரிகளின் வாதம் என்னவெனில் மற்ற பிள்ளைகளுடன் பின்பு எப்படி பழகுவார்கள்? குழந்தைகளுக்கு தீயது எது என்று காட்டாவிட்டால், நல்லதின் தாக்கம் அவர்களுக்கு எப்படி புரியும் என்பது. அவர்களுக்கு என்ன சொல்வது? குழந்தைகள் மாசு மருவற்ற உள்ளத்தோடு பிறக்கின்றார்கள். தொடக்ககாலத்திலேயே அவர்களுக்கு நல்லதை காண்பித்து, பழக்கி விட்டால் பின்பு தீயதை காண நேரும்போதும் சரி அதை கடந்தே ஆக வேண்டிய சூழ் நிலையிலும் சரி அவர்களின் உறுதி அழியாது. ஆனால் தொடக்கத்திலேயே அவர்களுக்கு தீயதை பழக வேண்டிய சூழ்நிலையை நாமே உருவாக்கிக் கொடுத்தால்?

இளம்பிஞ்சுகளை தங்களின் உடல் பசிக்காக உபயோகிப்பதும் பல பள்ளிகளில் நடக்கின்றது. நாம், நம் பிள்ளைகளைவிடவும் அயலார்மீது அதிக நம்பிக்கை வைத்து நம் பிள்ளைகளை அவர்களின் சொல்படி நடக்குமாறு பணிக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் பிள்ளைகள் யார் மீது நம்பிக்கை வைப்பர்? பின் வளர்ந்தபின் அதன் தாக்கம் யார் மீது வீழும்?

இன்னும் பல விவாதங்களை காணலாம் எனினும் மேலும் உங்களின் பல கேள்விகளுக்கு கூகுளில் தேடுவதாலேயே நிறைய விடைகள் கிடைக்கும். அடுத்த பதிவில் இது போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் இன்னும் '' பற்றி புரிந்து கொள்ள தேவையான தகவல் வலைகளையும் கொடுக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ.
வஸ்ஸலாம்.

7 comments:

  1. //இந்த வலையை எந்த அளவு நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கலாம் என்பதுதான்//

    வித்யாசமான சிந்தனை ஜஸாக்கல்லாஹு க்கைர் .

    ReplyDelete
  2. @ஜெய்லானி,
    @பாத்திமா,

    நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

    ReplyDelete
  3. ஜஸாகல்லாஹு கைர்.
    JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

    what is the meaning for அன்னு

    ReplyDelete
  4. @ Nidur ali Bhai,

    Wa Iyyakum.

    Annu is the short form of my real name, it is the name through which my family calls me. Thanks for your visits and regular feedbacks. :)

    ReplyDelete
  5. salam ungal thawa pani valara duavum vazththukkalum

    ReplyDelete
  6. wa alaykum as salam brother Taj,
    Thanks for your wishes and du'as. Welcome again.

    ReplyDelete